அமைச்சர் ராமலிங்கம் மீது வீடு அபகரிப்பு புகார்: விவசாயி மகன்கள் மறுப்பு

புகார் கொடுத்த முத்துசாமியின் மகன்கள் மற்றும் மகள் ஆகியோர், தனது தந்தை தவறான புகார் அளித்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர்.
கடந்த, 27-ம் தேதி ஈரோடு மாவட்டம், 46 புதூர், கருக்கம்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி என்ற முதியவர், ஈரோடு எஸ்.பி., பொன்னியிடம் ஒரு புகார் அளித்தார். அதில், தனக்குச் சொந்தமான, 46 புதூர் ஊராட்சிக்குட்பட்ட இடத்தில், 3232 சதுர அடி அளவுள்ள வீட்டை அமைச்சர் கே.வி.ராமலிங்கமும் அவரது ஆதரவாளர்களும் மிரட்டி வாங்கியதாகத் தெரிவித்திருந்தார். அமைச்சர் மீது வீடு அபகரிப்பு புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டில் வெள்ளிக்கிழமை திடீர் திருப்பம் ஏற்பட்டது. அமைச்சர் மீது புகார் அளித்த முத்துசாமியின் மகன்கள், மனோகரன், அசோகன், ரவிச்சந்திரன், மகள் ஜோதிமணி ஆகியோர் தனது தந்தைக்கு எதிராக எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர்.
அதில், தனது தந்தை பொய்யான தகவல்களைக் கூறி, புகார் அளித்து உள்ளதாகவும், குறிப்பிட்ட சொத்தை யாரும் அபகரிக்க வில்லை, அதனை தாங்களே அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தன் தந்தை மீது பல்வேறு குற்றசாட்டுக்களை தெரிவித்துள்ள இவர்கள், முத்துசாமி புகாரில் குறிப்பிட்ட வீட்டினை, கடந்த மே 31-ம் தேதி இளங்கோ என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்ததாகவும், பின், செப்டம்பர் மாதம் 25-ம் தேதி அதே சொத்தை தாங்களே கிரையம் மூலம் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மீது புகார் கொடுத்த விவசாயி முத்துசாமியின் மீதே அவரது மகன்களும், மகளும் புகார் அளித்துள்ளதால் இந்த வழக்கில் பரபரப்பு எழுந்துள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications