ஏர்வாடியில் லைட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட விவகாரம்.. பள்ளி தாளாளர் கைது
அதிக திறன் கொண்ட மின் விளக்குகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை: அதிக திறன் கொண்ட மின் விளக்குகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆண்டு விழாவிற்காக அதிக வெளிச்சம் கொண்ட மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன.
இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கண் எரிச்சல், கண்களில் நீர்வடிதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து கவனகுறைவாக செயல்படுதல், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் ஒளி, ஒலி அமைப்பாளர்கள் மற்றும பள்ளி தாளாளர்கள் மீதும் ஏர்வாடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியத்தை போலீஸார் கைது செய்தனர். ஒளி ஒலி அமைப்பாளர் ரமேஷ் மீது ஏர்வாடி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.