கரூரில் 9ம் வகுப்பு வரை படித்த "வக்கீல்" கைது...!
கரூர்: கரூரில் வக்கீல் போல நடித்து வந்த 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்த நபரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் அருகே உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மதுரையை சார்ந்த சரவணன், என்பவர் அலுவலகம் வைத்து நடத்தி வந்தார். இது வக்கீல் அலுவலகம் ஆகும்.

உண்மையில் இவர் 9 வது மட்டுமே படித்தவர் ஆவார். ஆனால் மதுரை ஹைகோர்ட் வழக்கறிஞர் எனக் கூறி மோசடி செய்து வந்ததாக தெரிகிறது.
இவர் போலி வக்கீல் என்பதை உண்மையான வக்கீல்கள் கண்டுபிடித்தனர். அவர் பல மோசடிச் செயல்களில் ஈடுபட்டதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து கரூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மாரப்பன் தலைமையில் கரூர் பசுபதிபாளையம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரவணன் கைது செய்யப்பட்டார்.

17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் இந்த போலி வழக்கறிஞருக்குத் தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications