அடுத்தடுத்து கைது.. அத்தனையும் அரசு போடும் பொய் வழக்கு.. அசராத திருமுருகன் காந்தி
தன் மீது தமிழக அரசு அடுத்தடுத்து பொய் வழக்கு போடுவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: முள்ளிவாய்க்காலில் மாண்ட ஈழத்தமிழர்களுக்கு மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயன்ற திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவரை உடனடியாக விடுதலை செய்யாத போலீசார் அவர் மீது குண்டர் சட்டத்தை ஏவியது. இது போதாது என்று திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈழத்தமிழர்கள் ராணுவத்தினரால் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மே மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது.

ஆண்டு தோறும் அஞ்சலி
உயிரிழந்த தமிழர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக மே 17 இயக்கத்தினரும், தமிழ் அமைப்புகளும் சென்னை மெரினாவில் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதே போன்று இந்த ஆண்டும் ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

புழல் சிறை
இதற்கு போலீசார் தடை விதித்தனர். மே 21-ஆம் தேதி தடையை மீறி அஞ்சலி செலுத்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மெரினாவிற்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 17 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்
இதனிடையே, திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது போதாதென்று நேற்று முன் தினம் காவிரி பிரச்சினையின் போது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு போடப்பட்டது.

மீண்டும் கைது
கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருமுருகன் காந்தியை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பொய் வழக்கு
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக திருமுருகன் காந்தியை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் "தமிழக அரசு அடுத்தடுத்து பொய் வழக்கு போடுகிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications