For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியின் காதை கடித்து துப்பிய கணவர்- ஒட்டவைக்க முடியாது என மருத்துவர்கள் கைவிரிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் குடும்பத் தகராறின் போது கணவர் அவரது மனைவியின் காதை கடித்துத் துப்பிய வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொருக்குப்பேட்டை கிருஷ்ணப்பகிராமணி தோட்டத்தை சேர்ந்தவர்கள் கேசவன், கவிதா தம்பதி. இவர்களிடையே நேற்று முன்தினம் இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது ஆத்திரமடைந்த கேசவன், தனது மனைவி கவிதாவின் வலது காதை பலமாக கடித்துவிட்டார்.

Family problem, husband bit wife's ear in Chennai

இதனால் கவிதாவின் காது துண்டானது. அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பத்தினர், கவிதாவை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். காது துண்டாகி ரொம்ப நேரம் ஆகிவிட்டதால், அதை திரும்ப ஒட்டவைக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்கலாம்.

போலீஸார் இது குறித்து விசாரணை நடத்த வந்துள்ளனர், ஆனால், கவிதாவோ, எனது கணவர் ஏதோ ஆத்திரத்தில் செய்து விட்டார், அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என கூறிவிட்டாராம்.

English summary
Husband bit his wife's ear while family dispute in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X