விவசாயிகள் முற்றுகை போராட்டம்... நடிகர் நாசரிடம் ஆதரவு கேட்ட பி.ஆர். பாண்டியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசரை அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர், பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சந்தித்து தங்களது போராட்டத்திற்கு ஆதரவு கோரியுள்ளனர்.
விவசாயிகளை வஞ்சிக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வருகிற 22ம்தேதி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக விவசாயிகள் குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசரை சந்தித்து பேசுயுள்ளனர். மேலும் விவசாயி பாலனுக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் விஷாலையும் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டி முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications