டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள், மாணவர்கள் கூட்டு போராட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் வரும் ஏப்ரல் 1, 2 ஆகிய தேதிகளில் விவசாயிகள், மாணவர் இயக்கங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூட்டாக அறிவித்துள்ளன.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வரும் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் திருச்சியில் விவசாயிகள், மாணவர் இயக்கங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூட்டாக அறிவித்துள்ளன.

வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி நதிநீர் மேலாண்மை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 16 நாள்களா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் மத்திய அரசு இவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

Farmers association announces sit-in protest on Apr 1,2

இதனால் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் ஆங்காங்கே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் வரும் ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடத்த உள்ளதாக விவசாயிகள், மாணவர் இயக்கங்கள் ஆகியன கூட்டாக அறிவித்துளளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+