காதலனுடன் போக விரும்பிய 8ம் வகுப்பு மாணவியை கத்தியால் சரமாரியாகக் குத்திய தந்தை

Subscribe to Oneindia Tamil

கோவை: காதலனுடன் போக விரும்பிய 14 வயது மகளை கத்தியால் சரமாரியாகக் குத்திய தந்தையை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை அருகிலுள்ள மருதமலை பகுதியை சேர்ந்த 40 வயது கூலித் தொழிலாளி தனராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அவர்களில் கடைசி மகள், தொண்டாமுத்தூரிலுள்ள தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

Father arrested for stabbing daughter

இந்நிலையில், அச்சிறுமிக்கு அதே பகுதியில் தனியார் நூல் மில்லில் பணியாற்றும் கடலூரைச் சேர்ந்த இளைஞருடன் காதல் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் காதலருடன் வெளியூர் சென்றுள்ளார் அம்மாணவி.

மாணவியைக் காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் காதலருடன் மாணவி பேருந்துக்காக காத்திருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மாணவியை மீட்ட போலீசார், அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால், மாணவியின் காதலர் தப்பி விட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது மூத்த மகள் வீட்டுக்கு, மாணவியை அழைத்து சென்றுள்ளார் அவரது தந்தை. அப்போது படிப்பில் கவனம் செலுத்துமாறு மகளுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்த மாணவி, தன்னை காதலனுடன் சேர்த்து வைக்குமாறு அடம் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, அருகில் கிடந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியின் தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+