கருணாநிதி இல்லாமல் முதல் முறையாக நடந்த திமுக செயற்குழு... தொண்டர்கள் வேதனை
Recommended Video

சென்னை: கருணாநிதி இல்லாமல் முதல் முறையாக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனால் தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்த கூட்டம் காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. முதலில் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசி வருகின்றனர்.

இதில் கருணாநிதிக்கு 1 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக செயல்தலைவராக உள்ள ஸ்டாலினை அடுத்த தலைவராக பொதுக்குழுவில் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அண்ணா அறிவாலயமே தொண்டர்கள் கூட்டத்தில் நிரம்பி இருந்தாலும் அவர்கள் மனதில் ஒரு குறை வெளிப்படுகிறது. அதாவது இந்த கூட்டம் கருணாநிதி இல்லாத முதல் செயற்குழு கூட்டமாகும். இதை எண்ணி நிர்வாகிகளும் தொண்டர்களும் வேதனையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications