பிளாஷ்பேக் 2015: உலகை உலுக்கிய தீவிரவாத தாக்குதல்கள்
சென்னை: 2015ம் ஆண்டில் இஸ்லாமிய தீவிரவாதிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்திய தாக்குதல்கள் உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்துவதாகக் கூறி பல அட்டூழியங்களை செய்து வருகிறார்கள். வங்கிகளை கொள்ளையடிப்பது, பெண்களை செக்ஸ் அடிமை சந்தைகளில் விற்பனை செய்வது என்று பல செய்யக் கூடாத செயல்களை செய்து சம்பாதிக்கிறார்கள்.
இந்நிலையில் 2015ம் ஆண்டில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய சில பயங்கர தாக்குதல்கள் உலகையே அதிர வைத்தது. மேலும் அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய இருவர் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் நடத்திய தாக்குதலையும் யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது.

சார்லி ஹெப்டோ
நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்ட பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ அலுவலகத்திற்குள் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி புகுந்த 2 சகோதரர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் 11 பேர் பலியாகினர், 12 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களுக்கு அல் கொய்தாவின் ஏமன் கிளையுடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

சிரியா
கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி சிரியாவில் உள்ள கோபேன் நகர் மற்றும் அதன் அருகில் உள்ள ப்ரக் பூதன் கிராமத்திற்குள் புகுந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தியும் அப்பாவி பொதுமக்கள் 145 பேரை கொன்றனர்.

ஈராக்
ஈராக்கில் உள்ள தியாலா மாகாணத்தில் உள்ள கான் பானி சாத் நகரில் ரம்ஜான் பண்டிகை அன்று மார்க்கெட்டில் வெடிகுண்டுகள் நிரம்பிய டிரக்கில் வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்தார். கடந்த ஜூலை மாதம் நடந்த இந்த தாக்குதலில் 120 பேர் பலியாகினர், 140 பேர் காயம் அடைந்தனர்.

ரஷ்ய விமானம்
எகிப்தில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்கிற்கு கிளம்பிய விமானம் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி சினாய் மாகாணத்தில் நடுவானில் இரண்டாக உடைந்து தரையில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர். விமானத்தை தாங்கள் சுட்டதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தெரிவித்தனர்.

பாரீஸ் தாக்குதல்
கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி பாரீஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு, தற்கொலைப் படை தாக்குதல்களில் 130 பேர் பலியாகினர். அதில் 89 பேர் இசை நிகழ்ச்சி நடந்த படாகிளான் தியேட்டரில் நடந்த தாக்குதலில் பலியானார்கள். தாக்குதல்களை நடத்திய 7 தீவிரவாதிகளும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications