கார் மீது வேன் மோதி... சுவர் மீது கார் மோதி.. பாம்பன் பாலத்தில் ஒரு திகில் விபத்து!
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தில் நிகழ்ந்த விபத்தில் வெளிநாட்டு பயணிகள் இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நேற்று சென்னையில் இருந்து பாம்பன் நோக்கி சென்ற கார் கடல் பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த வேன் திடீரென எதிர்பாரத விதமாக கார் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறிய கார், பாலத்தின் தடுப்புச் சுவர் மோதியது.

அதிர்ஷ்டவசமாக சுவர் மட்டும் கடலில் போய் விழுந்தது. கார் தப்பியது. சற்று வேகமாக கார் வந்திருந்தால், நிச்சயம் கடலில் போய் விழுந்திருக்கும். பேராபத்தும் ஏற்பட்டிருக்கும். அந்த காரில் 2 வெளிநாட்டு பயணிகள் பயணித்தனர்.
இந்த சம்பவத்தால் வேனில் இருந்தவர்களும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதிகப்படியான வேகமே இவ்விபத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications