காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளிக்குப் புதிய கட்டடம்.. அடிக்கல் நாட்டு விழா
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சிவகங்கை மவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

காரைக்குடி நகர்மன்றத் தலைவர் கற்பகம் இளங்கோ அவர்கள் தலைமையில் நகராட்சி ஆணையாளர் விஜயலெட்சுமி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. உதவி தலைமையாசிரியர் விஜயலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவில் நகராட்சி முதன்மை பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர், கிராமக் கல்விக் குழுத் தலைவர் ஆறுமுகம், கட்டிட ஒப்பந்தகாரர் செந்தில் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நகராட்சி தலைவர் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். பட்டதாரி ஆசிரியர் கோமதி நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications