தண்டி யாத்திரை டூடுல் போட்டு சுதந்திரதினத்தை கொண்டாடும் கூகுள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காந்தியடிகள் நடத்திய புகழ் பெற்ற தண்டி யாத்திரையை நினைவுகூறும் வகையில், டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது கூகுள்.
இந்தியாவின் 69வது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கூகுள் தேடுபொறி தனது முகப்பு பக்கத்தில் டூடுல் படம் வெளியிட்டுள்ளது. அதில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள், தண்டி யாத்திரை சென்ற நிகழ்ச்சி படமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஏகாதிபத்திய ஆங்கிலேயர் ஆட்சியில், இந்தியர்கள் அன்றாட சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் உப்புக்கும் வரி விதித்தனர். இதை எதிர்த்து, குஜராத்தின் தண்டிக்கு நடைபயணமாக யாத்திரை சென்று அங்கு உப்பு எடுக்கும் போராட்டத்தை காந்தியடிகள் 1930ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி நடத்தினார்.
சுதந்திர போராட்ட வரலாற்றில் அது ஒரு முக்கிய போராட்டம். எனவே, அந்த போராட்ட களத்தை நினைவூட்டியுள்ளது கூகுள்.












Click it and Unblock the Notifications