EXCLUSIVE: ரிலாக்ஸ்டாக இருக்கிறார் எச். ராஜா.. பண்ணை வீட்டிலிருந்து திரும்பினார்.. வீடியோ!
இன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா முன்ஜாமின் மனுதாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் அவரது பண்ணைவீட்டில் இருந்து காரைக்குடி சுப்பிரமணியபுரம் 9-ஆவது வீதியில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
நேற்று முதல் நாள் மாலை புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத போலீசையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கொச்சையாக திட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனிப்படை தேடி வருகிறது
எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனால் அவரை போலீஸ் தேடி வருகிறது. அவரை பிடிக்க இரண்டு தனிப்படை பிரிவு போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது. 10 போலீஸ் கொண்ட இரண்டு தனிப்படை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
தலைமறைவானார்
ஆனால் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா நேற்றே தலைமறைவாகிவிட்டார். நேற்று காலையில் மன்னார்குடியில் இருந்த நிலையில் இரவோடு இரவாக அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. அதன்பின் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. இதனால் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் உஷார் நிலையில் போலீஸார் நிறுத்தப்பட்டனர்.
எங்கே என்ற கேள்வி
இந்த எச்.ராஜா உண்மையில் எங்கே சென்றார் என்ற கேள்வி எழுந்தது. எங்கே சென்றார், அவர். போலீஸ் அவருடன் இருந்த போது அவர் எப்படி தப்பித்து சென்றார் என்ற கேள்வி எழுந்தது. இன்று அவர், முன்ஜாமின் மனுதாக்கல் செய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது. இதனால் இன்று அவர் வெளியே வர வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியானது.
பண்ணை வீடு
இந்த நிலையில் அவர் தனது பண்ணைவீட்டில்தான் தங்கி இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காரைக்குடியில் உள்ள கண்டனூர் பகுதியில் அவரது பண்ணைவீடு இருக்கிறது. இதன் பெயர் ஸ்ரீ லலித்ராஜ் கார்டன் ஆகும். அங்குதான் நேற்று இரவோடு இரவாக சென்று தங்கி உள்ளார் எச்.ராஜா.
போலீஸ் பாதுகாப்பு
இந்த நிலையில் தற்போது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு வழக்கமாக பாதுகாப்பு அளிக்கும் போலீஸார் உடன் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது பண்ணை வீட்டுக்குள் போலீஸ் வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.
|
வீடியோ வெளியானது
தற்போது இதுகுறித்த அதிர்ச்சி அளிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர் எங்கே இருக்கிறார் என்று, அந்த பண்ணை வீடு வீடியோவும், வெளியே போலீஸ் வாகனம் நிற்பதும் வீடியோவாக வெளியாகி உள்ளது. ஏற்கனவே எஸ்.வி சேகருக்கு இப்படி போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சொந்த வீடு
நேற்று இரவு முழுக்க அவர் பண்ணைவீட்டில்தான் தங்கி இருந்தார். இந்த நிலையில் காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் பண்ணை வீட்டிலிருந்து சுப்பிரமணியபுரம் சென்று இருக்கிறார் எச் ராஜா. சிறிது நேரம் முன் காரில் தனக்கு அளிக்கப்பட்டு உள்ள போலீஸ் பாதுகாப்புடன் எச்.ராஜா சென்றார். சுப்பிரமணியபுரம் 9-ஆவது வீதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார் எச் ராஜா.