கலகலன்னு ஊரு, கெத்தா மெட்ராஸ் சிட்டினு பேரு.. ஹர்பஜன் கலக்கல் வாழ்த்து #MadrasDay
Recommended Video
சென்னை: 379வது சென்னை தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தனக்கே உரித்தான பாணியில் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வரும் ஹர்பஜன்சிங், கிரிக்கெட் தொடரின்போதும் தமிழில் பஞ்ச் ட்வீட்டுகள் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். இதன்பிறகு திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்திருந்த நிலையில், இப்போது சென்னை தினத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை.
ஹர்பஜன்சிங் டுவிட்டை பாருங்கள்:
கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு
பரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோரு
ஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு
என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்
இன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன். இவ்வாறு ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 22, 2018
பரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோரு
ஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு
என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்
இன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன் #MadrasDay @ChennaiIPL pic.twitter.com/pvtU5Fd9N5