கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.. மதுரை ஹைகோர்ட் அதிரடி
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கலாம் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை: தனியார் பள்ளிகள் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பது உறுதியானால், அரசு அந்த பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜூ என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் மத்திய அரசு பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்ந்தும் கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில், 2009 ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த சட்டத்தின்படி தனியார் பள்ளிகள் 25 சதவிகித மாணவர்களுக்கு கட்டணம் இல்லாமல் இலவசக் கல்வி அளிக்க வேண்டும். இதன் மூலம் எஸ்சி, எஸ்டி பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் இலவசமாகப் படிக்கலாம்.
ஆனால், பல தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, சேர்ந்து படிப்பவர்களிடம் கல்விக் கட்டணம் மற்றும் சீருடைக் கட்டனம் , புத்தகக் கட்டணம் என்று பல்வேறு வகைகளில் தனியார் பள்ளிகள் கட்டணங்களை வசூலித்து வருகின்றனர் என்று செய்தி வெளியானது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், இந்த திட்டத்துக்காக மத்திய மாநில அரசுகள் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷா பானு அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், "இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து மாநில அரசின் பள்ளிக் கல்வித்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணையில் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உண்மையெனில் அந்த பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் 6 முதல் 14 வயது வரையுள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications