For Quick Alerts
For Daily Alerts
Just In
நான் விழித்துக் கொண்டேன்... ஆனால் மக்கள் இன்னும் விழிக்கவில்லை: கருணாநிதி
சென்னை: ‘கனவு கண்ட நான் விழித்துக் கொண்டேன், ஆனால் மக்கள் இன்னும் விழிக்கவில்லை' என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, இன்று தனது 92-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கருணாநிதியின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்
நாளையொட்டி தொண்டர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக அண்ணா அறிவாயலத்துக்கு வந்தார் கருணாநிதி. அப்போது செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அதில், ‘கனவு கண்ட நான் விழித்துக் கொண்டேன். ஆனால் மக்கள் இன்னும் விழிக்கவில்லை' என கருணாநிதி தெரிவித்தார்.
கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறி ஆசி பெறுவதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அறிவாலயத்தில் குவிந்துள்ளனர். கையில் ஆயிரம் ரூபாய் நோட்டு மாலைகளுடன் அவர்கள் வந்துள்ளனர்.
Comments
English summary
On his 92nd birthday, the DMK leader Karunanidhi has said that , the people are still sleeping, but he wakes up.
Story first published: Wednesday, June 3, 2015, 11:45 [IST]