கூடுதல் படையுடன் சென்றிருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்.. போலீஸ் அதிகாரி பரபரப்பு தகவல்!
கொள்ளையர்களை பிடிக்க நள்ளிரவில் சுற்றி வளைத்திருக்கக்கூடாது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கொள்ளையர்களை பிடிக்க நள்ளிரவில் சுற்றி வளைத்திருக்கக்கூடாது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க சென்ற காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெரியபாண்டியனின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.
அவரது மகன்களின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்த முதல்வர் பெரியபாண்டியன் கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் அதிகாரி தகவல்
இந்நிலையில் வெளிமாநிலங்களுக்கு குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போது போலீஸார் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் போலீஸ் அதிகாரி ஒருவர் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.

சர்வ சாதாரணமானது
ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் துப்பாக்கி நடமாட்டம் மிகவும் சர்வ சாதாரணமானது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். வெளி மாநிலங்களுக்கு குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போது மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாரை போய் சந்திக்க வேண்டும்
வெளி மாநில போலீஸ் அதிகாரிகளுடன் தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வெளி மாநிலத்திற்கு சென்ற பின்னர் யாரை போய் சந்திக்க வேண்டும் என்பது தமிழகத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பே உறுதி செய்யப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்திருக்க மாட்டார்
இதன்படி தனிப்படை போலீசார் திட்டமிட்டு அங்கு சென்று குற்றவாளிகளை பிடித்து வருவார்கள் என்ற அவர், ராஜஸ்தான் சென்ற தனிப்படையினர் அதுபோன்று திட்டமிட்டு அங்கு சென்றிருந்தால் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உயிரிழந்திருக்க மாட்டார் என்றும் அவர் கூறினார்.

கூடுதல் படையுடன்
வெளிமாநிலங்களை பொறுத்தவரையில் குறிப்பாக ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் போலீஸ் என்று கூட பார்க்காமல் திடீர் தாக்குதல்களில் ஈடுபடக்கூடியவர்கள். எனவே இதுபற்றிய தகவல்களை உள்ளூர் போலீசார் துணையுடன் முன்கூட்டியே சேகரித்து கூடுதல் படையை கேட்டு பெற்றிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தவிர்த்திருக்க முடியும்
தேவையான அளவிற்கு போலீஸ் படையுடன் கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை நெருங்கி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் கொள்ளையர்களை உயிருடன் பிடித்திருக்கலாம் என்றும் இது போன்ற அசம்பாவிதங்களையும் தவிர்த்திருக்க முடியும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications