தந்தையார் வையாபுரி நினைவு நாள்... புழல் சிறையில் மௌனவிரதம் இருக்கும் வைகோ!
புழல் சிறையில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று மௌன விரதத்திலொ ஈடுபட்டு உள்ளார். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த விரதத்தை தன் தந்தை வையாபுரியின் நினைவு தினத்தையொட்டி கடைபிடிக்கிறார்.
சென்னை: தேசத் துரோக வழக்கில் புழல் சிறையில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மௌனவிரதம் இருக்கிறார். அதனால், யாருடனும் எதற்காகவும் பேசாமல் அமைதியாக உள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது, 2008 ஆம் ஆண்டு தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக விசாரணை முடிவின்றி சென்று கொண்டிருந்ததால், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கூறி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஜாமீனில் செல்ல விருப்பமில்லை என்று கூறி, வைகோ சிறைக்குச் சென்றார். தற்போது அவர் புழல் சிறையில் முதல் வகுப்பு 'செல்'லில் இருக்கிறார்.

சிறையில் இருக்கும் வைகோ, இன்று முழுவதும் மௌன விரதம் இருக்கிறார். இன்று வைகோவின் தந்தை வையாபுரியின் நினைவு தினம் என்பதால் வைகோ மௌனவிரதம் மேற்கொண்டுள்ளார். மௌனவிரதத்தின்போது தண்னீர் கூட குடிப்பது இல்லை.
வைகோவின் தந்தை வையாபுரி கடந்த 1973ஆம் ஆண்டு இறந்தார். கடந்த 43 வருடங்களாக தந்தையின் நினைவு தினத்தன்று வைகோ மௌன விரதம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இவ்விரதத்தை வைகோ தொடர்வார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications