திருச்செந்தூரில் சரத்குமார் மோசமான தோல்வி.. திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி
திருச்செந்தூர்: அதிமுக கூட்டணி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார், 26,001 வாக்குகள் வித்தியாசத்தில், திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வியை தழுவினார்.
திருச்செந்தூரில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 9 மணி நிலவரப்படி, சரத்குமார், 2428 வாக்குகளை பெற்றிருந்த நிலையில், திமுகவின், அனிதா ராதாகிருஷ்ணன் 5317 வாக்குகளை பெற்றிருந்தார்.

இவர்கள் நடுவேயான வாக்கு வித்தியாசம் 2,889 என்ற அளவில் இருந்தது. இது தொடர்ந்து விரிவடைந்து கொண்டே சென்றது. மதியம் 3 மணியளவில் முழு அளவிலான ரிசல்ட் வெளியே வந்தது. அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் 26,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சரத்குமார் 2வது இடத்தை பிடித்தார்.
அனிதாராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமின்றி, தென்காசி தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்றிருந்த சரத்குமார், இம்முறை தொகுதி மாறி வந்து திருச்செந்தூரில் போட்டியிட்டதும், அவரது பின்னடைவுக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது சரத்குமார் வாகனத்தில் இருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது, வெங்கடேச பண்ணையாரின் ஊருக்குள் விடாமல் சரத்குமார் விரட்டியடிக்கப்பட்டது போன்ற பல சர்ச்சைகளும் பிரசார காலத்தில் அரங்கேறின.












Click it and Unblock the Notifications