அடுத்த ஆப்பு.. கடந்த 10 வருடங்களில் வாங்கப்பட்ட வீடு, நிலம் ஆவணங்களை சேகரிக்கிறது வருமான வரித்துறை!
கடந்த 10 வருட காலத்தில் நிலம், வீடு வாங்கியோரது விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளது வருமான வரித்துறை.
சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் மனை விற்பனை தொடர்பான விவரங்களை வருமான வரித்துறை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து திடீரென நிறுத்தியது மத்திய அரசு. எனவே உடனடியாக தங்களிடமிருந்த ரூ.500 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கொண்டு இரவோடு இரவாக நகைக் கடைகளை முற்றுகையிட்டு ஆபரணங்களை வாங்கி குவித்தனர் பெரும் பணக்காரர்கள்.

இதையடுத்து, தங்க நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டுகளை நடத்தியது. சிசிடிவி காட்சிகளை கையகப்படுத்தி வைத்துள்ளது. இதே பாணியில், பத்திரப் பதிவுத் துறையிடம் இருந்து விவரங்களை சேகரித்து வருகிறது வருமான வரித்துறை.
கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக, அவற்றை வைத்து ஆபரணங்கள் மட்டுமின்றி, வீடு, நிலம் வாங்கியவர்களை கண்டுபிடிக்க வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
கடந்த 10 வருடங்களாக யார், யார் வீடு, நிலம், வீட்டுமனை வாங்கினார்களோ அந்த ஆவணங்களை சேகரித்து வருகிறது வருமான வரித்துறை. அவர்களில் சந்தேகத்திற்கிடமானவர்களிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பினாமி சொத்துக்கள் அம்பலமாகும் என தெரிகிறது. ஏற்கனவே மோடியும், தனது அடுத்த குறி பினாமி சொத்துக்கள்தான் என கூறியிருந்த நிலையில், வருமான வரித்துறை நடவடிக்கை அதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. இதனால் நிலம், வீடு வாங்கியோர் ஆடிப்போயுள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications