#rakshabandhan இந்தியர்களின் மனங்களை பதக்கத்தால் நிரப்பிய பாசக்கார தங்கச்சி... சாக்ஷி மாலிக்!
சென்னை: இன்று ரக்ஷா பந்தன் எனப்படும் ராக்கி பண்டிகை வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தற்போது அங்கு இரட்டிப்பு சந்தோஷத்துடன் கொண்டாடப்படுகிறது.. காரணம், சாக்ஷி மாலிக்கின் வெண்கல வெற்றி!
ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட கிடைக்காமல் திக்கித் திணறி வந்த நிலையில் இன்று இந்தியாவுக்கு அதிகாலையிலேயே அளப்பறிய சந்தோஷத்தைக் கொடுத்து விட்டார் சாக்ஷி மாலிக்.
சோர்ந்து போய்க் கிடந்த இந்திய ரசிகர்கள் இப்போது சாக்ஷியை தங்களது சொந்த சகோதரியாக பாவித்துத் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். காரணம் இன்று ரக்ஷா பந்தன் என்பதால்.
|
மோடிய குஷியாயிட்டாரு
பிரதமர் மோடிதான் முதன் முதலாக ரக்ஷா பந்தனைக் குறிப்பிட்டு சாக்ஷியை வாழ்த்தி மகிழ்ந்தார். ரக்ஷா பந்தன் கொண்டாடப்படும் இந்த நல்ல நாளில் நமக்குப் பெருமை தேடிக் கொடுத்து விட்டார் இந்தியாவின் மகளான சாக்ஷி என்று பெருமிதம் வெளியிட்டிருந்தார் மோடி.
அண்ணன்களின் கொண்டாட்டம்
சமூக வலைதளங்களிலும் ரக்ஷா பந்தனையும், சாக்ஷியின் வெற்றியையும் இணைத்து பலரும் சந்தோஷமாக அதைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஒவ்வொரு இந்திய ஆணையும் பெருமைப்படுத்தி விட்டார் சாக்ஷி என்றும் பலர் பெருமை வெளியிட்டுள்ளனர்.
பொருத்தமான வெற்றி
ரக்ஷா பந்தன் பண்டிகையன்று சாக்ஷி பெற்றுள்ள இந்த வெற்றி மிகப் பொருத்தமானது. இந்தியாவின் மகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களின் சகோதரியும் சாக்ஷிதான் என்றும் பலர் புகழாரம் சூட்டியுள்ளனர்.
போராடி வந்த வெற்றி
இந்தியாவுக்கு இது பெரும் போராட்டத்திற்குப் பின்னர் கிடைத்த பெரிய வெற்றியாகும். ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 11 நாட்களாகியும் பதக்கம் கிடைக்காமல் அல்லாடி வந்த நிலையில் இன்று அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார் சாக்ஷி.
உண்மையில் ராக்கியன்று சாக்ஷி பெற்ற இந்த வெற்றியை அத்தனை இந்திய ஆண்களும் தங்களது சொந்த தங்கையே வென்ற உணர்வுடன்தான் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதில் சந்தேகமே இல்லை.