ஒகேனக்கல் பரிசல் விபத்து: 5 நாட்களுக்குப் பின் குழந்தை உடல் மீட்பு
சென்னை: ஒகேனக்கல் பரிசல் விபத்தில் சிக்கி உயிரிழந்த பத்து மாத குழந்தை சுபிக்ஷாவின் உடல் ஐந்து நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. மீன்கள் தின்ற நிலையில் உப்பிய நிலையில் கிடைத்த அந்த உடல் காண்பவர்களை பதறச் செய்திருக்கிறது.
திருமண நாள் கொண்டாடுவதற்காக கடந்த 30ம் தேதி சென்னை தியாகராய நகரிலிருந்து ஒகேனக்கல் அருவி பகுதிக்கு ராஜேஷ் - கோமதி குடும்பத்தினர் உறவினர்களுடன் சுற்றுலா சென்றனர். குழந்தைகள் சச்சின், தர்ஷன், மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் கெளரி, மைத்துனர் ரஞ்சித் அவரது மனைவி கோகிலா, அவரது பத்து மாத குழந்தை சுபிக்ஷா ஆகியோர் பரிசலில் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென்றுநீர் சுழற்சியில் பரிசல் சிக்கி கவிழ்ந்தது.

இதில் ராஜேஷ், அவருடைய மனைவி கோமதி, அவர்களது மகன் சச்சின், பரிசல் ஓட்டி கஜாமுருகேசன் ஆகிய 4 பேர் உயிர் தப்பினர். கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி கௌரி, மகன் ரஞ்சித், அவரது மனைவி கோகிலா, 10 மாத குழந்தை சுபிக்ஷா, ராஜேஷ் மகன் தர்ஷன் ஆகிய 6 பேர் பலியானார்கள்.
இதில் குழந்தை சுபிக்ஷா தவிர மற்ற 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. விபத்தை தொடர்ந்து பரிசல் ஓட்டி கஜா முருகேசனை போலீசார் கைது செய்தனர். காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது.
கடந்த 4 நாட்களாக குழந்தை சுபிக்ஷாவின் உடலை தேடும் பணியில், 100 பரிசல்களில் 10 குழுவினர் ஈடுபட்டனர். 5வது நாளான நேற்று மாலை பரிசல் கவிழ்ந்த இடத்தில் இருந்து 50 அடி தூரத்தில் குழந்தையின் உடல் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மீன்கள் தின்ற கண்கள், உப்பிய உடல் என அந்த பிஞ்சுக்குழந்தையின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அந்த உடலைக்காண்பவர்களை பதைபதைக்க வைத்தது. மீட்கப்பட்ட குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications