சென்னை, வேலூரைத் தொடர்ந்து திண்டுக்கல் அருகே ஜோசப் முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு
முதியோர் கொலை விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் அருகே உள்ள ஜோசப் கருணை இல்லத்திலும் அதிகாரிகள் ஆய்வு நடத்திவருகின்றனர்.
Recommended Video

திண்டுக்கல் : ஆதரவற்ற முதியோர்களைக் கொன்று அவர்களின் எலும்புகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்த புகாரில் சிக்கியுள்ள ஜோசப் முதியோர் கருணை இல்லத்தின் கிளைகளிலும் தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த ஜோசப் கருணை இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி, ஆயிரக்கணக்கான முதியவர்களைக் கொன்று, அவர்களின் உடலைப் பதப்படுத்தி எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக கடந்த வாரம் புகார் எழுந்தது. இதனை அடுத்து கோட்டாட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை ஆகியோர் அங்கு ஆய்வு நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அந்த காப்பகம் உரிய ஆவணங்கள் இல்லாமல் செயல்படுவதையும், இறந்தவர்களை பதப்படுத்த தனி சிமெண்ட் அறைகள் இருப்பதையும் ஆய்வில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக காப்பக நிர்வாகம் சார்பில், முறையான விளக்கம் தரப்படவில்லை.
இதனையடுத்து அங்கிருந்த முதியவர்கள் அனைவரும் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். மேலும் ஜோசப் கருணை இல்லத்தின் கிளைகள் உள்ள இடங்களிலும் மக்கள் போராடத் துவங்கியதை அடுத்து, வேலூர் காட்பாடியில் செயல்பட்டு வந்த கருணை இல்லம் நேற்று மூடி சீல் வைக்கப்பட்டது.
இன்று திண்டுக்கல் அருகே கொடைரோடு ஜோசப் கருணை இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அங்கு கடந்த மாதத்தில் மட்டும் 24 முதியவர்கள் இறந்த விவகாரம் தற்போது தெரிய வந்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications