அம்மாவுக்கு தண்டனை: கன்னடர், தமிழர் வெறுப்பை தூண்டிவிடக் கூடாது: தா. பாண்டியன்
சென்னை: ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்துள்ளது பற்றி தமிழக, கர்நாடக மக்களிடையே யாரும் வெறுப்புணர்ச்சியை தூண்டிவிடக் கூடாது. ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தது கர்நாடக அரசோ, கர்நாடக மக்களோ இல்லை, சுப்பிரமணிய சாமி தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து நாடு முழுவதும் விவாதித்து வருகிறார்கள். இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மேல் முறையீடு செய்து மறுதீர்ப்பு பெற வாய்ப்பு இருக்கிறது.

அதனால் இந்த தீர்ப்பு பற்றி எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்த தீர்ப்பு மூலம் தமிழக, கர்நாடக மக்களிடையே யாரும் வெறுப்புணர்ச்சியை தூண்டிவிடக் கூடாது. ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தது கர்நாடக அரசோ, கர்நாடக மக்களோ இல்லை, சுப்பிரமணிய சாமி தான்.
தீர்ப்பை கூறியது தான் கர்நாடக நீதிபதி. அதிமுகவினர் தங்கள் கட்சி தலைவி மீது கொண்ட ஈடுபாட்டால் தீர்ப்பு பற்றி விமர்சனம் செய்கிறார்கள். நீதிபதி அளித்த தீர்ப்பை விமர்சிக்க கூடாது.
புதிய முதல்வர் வறட்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு வரும் மார்ச் மாதம் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை புதுச்சேரியில் நடைபெறும். விலைவாசி உயர்வை கண்டித்து அக்டோபர் 6ம் தேதி நடப்பதாக இருந்த மறியல் போராட்டம் அதே மாதம் 16ம் தேதி நடைபெறும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications