தேர்தலாவது தமிழகத்தில் நடக்குமா... இல்லை அதுவும் வட மாநிலங்களில்தானா.. தீபா செம கேள்வி!

தேர்தலாவது தமிழகத்தில் நடைபெறுமா இல்லை அதுவும் வடமாநிலங்களில்தான் நடக்குமா என்று ஜெ.தீபா கேள்வி எழுப்பினார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வெளிமாநிலங்களிலுக்கு சென்று நீட் தேர்வு எழுதுவது...பொதுமக்கள் கருத்து-வீடியோ

    சென்னை: தேர்வு தான் தமிழ் நாட்டில் இல்லை, தேர்தலாவது தமிழ்நாட்டில் நடக்குமா இல்லை அதுவும் வட மாநிலங்களில் தான் நடக்குமா ? என்று ஜெ.தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.

    நீட் தேர்வு கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழக பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ பாட திட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டதால் இந்த தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்த தேர்வை ரத்து செய்யக் கோரியும், பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த கோரியும் அரியலூர் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    விண்ணப்பங்கள்

    விண்ணப்பங்கள்

    இதன்பிறகு பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. இந்த ஆண்டு தேர்வு நடத்துவதற்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் நாளை தேர்வு நடைபெறவுள்ளது.

    மற்ற மாநிலங்களில்

    மற்ற மாநிலங்களில்

    தேர்வே வேண்டாம் என்று கோரிய மாணவர்களை இந்த தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் அமைக்கும்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதை சிபிஎஸ்இ ஏற்காமல் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத மற்ற மாநிலங்களில் தேர்வு மையங்களை ஏற்படுத்தியது.

    மற்ற மாநிலங்களில்

    மற்ற மாநிலங்களில்

    தேர்வே வேண்டாம் என்று கோரிய மாணவர்களை இந்த தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் அமைக்கும்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதை சிபிஎஸ்இ ஏற்காமல் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத மற்ற மாநிலங்களில் தேர்வு மையங்களை ஏற்படுத்தியது.

    தமிழ் சங்கங்கள் உதவி

    தமிழ் சங்கங்கள் உதவி

    இதற்கு கடும் கண்டனம் நிலவியது. ராஜஸ்தான், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வுகள் நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்வை பல்வேறு மாணவர்கள் எழுதாமல் விட்டு விட்டனர். எனினும் மற்ற மாநிலங்களுக்கு தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்ட உதவிகளை தமிழ் சங்கங்களும் தன்னார்வல அமைப்புகளும் செய்யவுள்ளன.

    தீபா கருத்து

    தமிழக மாணவர்களை மன ரிதீயில் தோற்கடிக்கச் செய்வதற்காகவே இதுபோன்று சிபிஎஸ்இ செய்துள்ளதாக சீமான் தெரிவித்தார். இதுகுறித்து தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா கூறுகையில் தேர்வு தான் தமிழ் நாட்டில் இல்லை, தேர்தலாவது தமிழ்நாட்டில் நடக்குமா இல்லை அதுவும் வட மாநிலங்களில் தான் நடக்குமா ? என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+