தேவர் சிலைக்கு தங்கக் கவசம்... அணிவித்தார் ஜெயலலிதா
பசும்பொன்: பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று தங்கக் கவசத்தை அணிவித்தார்.
அவரது வருகையைத் தொடர்ந்து 5000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் வந்தார் முதல்வர் ஜெயலிதா. பின்னர் தேவர் நினைவிடம் சென்று அங்கு தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவித்தார். அதிமுக சார்பில் இந்த தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு ஜெயலலிதா பசும்பொன் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா அதிமுக சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார். அதன்படி தற்போது தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை வந்த ஜெயலலிதாவை, விமான நிலையத்தில் மேயர், கலெக்டர் உள்பட பலர் வரவேற்றனர். மேலும் அதிமுக தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் கிராமத்துக்கு வந்த முதல்வரை அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் தேவர் நினைவிடத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்த தங்கக் கவசத்திற்கு அவர் புனித நீர் ஊற்றினார். அதில் ரோஜா மலர்களையும் தூவினார். இதைத் தொடர்ந்து தங்க கவசங்களை கோவை காமாட்சிபுரி ஆதீனத்திடம் ஜெயலலிதா வழங்க, அதனை முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அவர் அணிவித்தார். அதன் பின்னர் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு முத்துராமலிங்கத்தேவருக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் ஹெலிகாப்டரில் மதுரை புறப்பட்டார் ஜெயலலிதா.
முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்புக்காக தென் மண்டல ஐஜி அபய் குமார் சிங் தலைமையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 3 சரக டிஐஜிக்கள், 7 எஸ்.பிக்கள் உள்பட 5000க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
7 அமைச்சர்கள் முன்கூட்டியே வந்து ஆய்வு
முன்னதாக முதல்வர் வருகையைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான 7 அமைச்சர்கள் குழு நேரில் வந்து ஆய்வு செய்தது.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத வாக்கில் நடைபெறவுள்ளது. அதற்கான தேதிகள் அடுத்த மாத வாக்கில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications