எத்தனை முறை முயற்சித்தும் ஜெயலலிதா போட்டோ தெளிவாக வரவில்லையே.. இப்படியும் கவலையில் அதிமுகவினர்
விருதுநகர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு மாவட்டங்களிலும், அதிமுக நிர்வாகிகள் கடும் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் நகர, ஒன்றிய கழகங்கள் சார்பில் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி கோவில்களில் பூஜைகள், தீபாராதனைகள், அபிஷேகங்கள் நடத்தி வருகின்றனர். இதில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான, கே.டி.ராஜேந்திர பாலாஜி தவறாமல் கலந்து கொள்கிறார். ஆனாலும், மாவட்ட கழகம் சார்பில் எல்லா ஊர்களிலும் பூஜைகள் நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது மாவட்ட செயலாளர்கள் தரப்பு.

இந்நிலையில், சிவகாசி கோவிலில் வைத்து, கட்சிக்காரர்கள், அனைவரும், முதல்வர் குரூப் புகைப்படம் எடுத்துள்ளனர்.
அப்போது அமைச்சர் கையில், ஜெயலலிதாவின் பிரேம் போட்ட பெரிய போட்டோ ஒன்றை வைத்துள்ளார். ஆனால் போட்டோக்களில் ஜெயலலிதா புகைப்படம் மட்டும் தெளிவாகவே விழவில்லையாம்.
போட்டோகிராபர் திரும்ப திரும்ப படம் எடுத்தபோதிலும், போட்டோ மங்கலாகவே இருந்ததாம். இதனால் சென்டிமென்ட்டாக யோசித்து கவலையடைந்த அதிமுக நிர்வாகிகள், கோயிலிலேயே தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications