பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஜெ. எதிர்ப்பு- வாபஸ் பெற கோரிக்கை
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் மாதத்தில் 2-வது முறையாக நள்ளிரவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 6 வாரங்களில் இது 4-வது முறை உயர்வாகும்.

இதனடிப்படையில் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.60-லிருந்து ரூ.65.65-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.53.93-லிருந்து ரூ.55.19-ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையில் விலை ரூ.65.15-ஆக உயர்ந்துள்ளது. இதன் பழைய விலை ரூ.65.04-ஆக இருந்தது. அதேபோல், டீசலின் விலை ரூ.56.78-ஆக உயர்ந்துள்ளது. இதன் பழைய விலை ரூ.55.44-ஆக இருந்தது.
இந்த விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரக் கூடும். டீசல் விலை உயர்வால் சரக்குக் கட்டணமும் அதிகரிக்கும்.
ஆகையால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications