நடராஜுக்கு ஆப்பு வைத்த டிவி சேனலின் ஆடியோ: அவசரப்பட்டு முடிவெடுத்தாரா ஜெ?
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்பு பற்றி பிரபர தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சியில் கருத்து கூறிய ஆர். நடராஜன் என்பவரின் புகைப்படத்திற்கு பதிலாக தவறுதலாக முன்னாள் டிஜிபி நடராஜ் புகைப்படத்தை ஒளிபரப்பியதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது அதிமுக தலைமை சரியாக விசாரிக்காமல் எடுத்த அவசர முடிவு என்ற கருத்தும் பரவி வருகிறது.
ஞாயிறன்று காலையில் வாட்ஸ் அப்களில் முன்னாள் டிஜிபி நடராஜ் நீக்கம் என்ற தகவல் பரவியது. ஏன்? எதற்கு என்று பலருக்கும் புரியவில்லை. பிறகுதான் அரசு எதிராக டிவி சேனலில் பேசினார் என்ற தகவல் பரவியது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிரபல சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் செம்பரம்பாக்கம் ஏரி தாமதமாக திறக்கப்பட்டதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
அப்போது டிவியில் தொலைபேசி வாயிலாக பேசிய நடராஜன் என்பவர், இங்கே அதிகாரம் பரவலாக்கபடவில்லை. எல்லா அதிகாரமும் முதல்வர் கையில் உள்ளது. அவர் கண்ணசைவுக்கு அதிகாரிகள் காத்திருந்ததே இந்த பெரும் சேதத்துக்கு காரணமாக அமைந்து விட்டது என்று அவர் குற்றம் சாட்டினார். அதோடு முதல்வருக்கு எதிராகவும் பல புகார்களை முன்வைத்தார்.

தொலைக்காட்சியில் கருத்து
டிவி யில் நட்ராஜ் முன்னாள் டிஜிபி என்று பெயர் போட்டு புகைப்படத்தை ஒளிபரப்பினர். அப்போது இந்த பேட்டியை கேட்ட அதிமுகவினர் பலரும், நடராஜ் மீது கோபப்பட்டனர். எவ்வளவோ பேர் சீனியாரிட்டியில் இருந்தும் அம்மா, இவருக்கு தேர்வாணைய தலைவர் பதவியை கொடுத்தார் முதல்வர். ஆனா அதையெல்லாம் மறந்து விட்டு இப்படி பேசலாமா என்று சொல்லி அதிமுக தலைமைக்கு போன் மூலமாகவும், வாட்ஸ் அப் வாயிலாகவும் புகார்களை தட்டிவிட்டனர். சிலர் அந்த பேட்டியின் ஆடியோவையே அனுப்பி வைத்தனர்.

கட்சியை விட்டு நீக்கிய முதல்வர்
இதனை கேட்ட உடனேயே கோபத்தின் உச்சிக்குப் போன முதல்வர் ஜெயலலிதா உடனடியாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டிஜிபி நடராஜை நீக்கி உத்தரவிட்டார்.
அதிமுகவை பொருத்தவரை கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களைப் பற்றி விசாரித்துதான் நடவடிக்கை எடுப்பார் என்றும், மாநில உளவுத்துறையின் கருத்துக்களை கேட்டுதான் செயல்படுவார் என்றும் கூறப்பட்ட நிலையில், நட்ராஜ் நீக்கத்தின் போது முதல்வர், உளவுத்துறையின் கருத்தை கேட்கவில்லையாம்.

அவசர முடிவு
எந்த அளவிற்கு நம்பினோம் இப்படி நம்பிக்கை துரோகம் செய்து விட்டாரே என்ற கோபத்தின் வேகத்தால் ஜெயலலிதா தானே ஒரு முடிவுக்கு வந்து விட்டார் என்றும் கூறுகின்றனர். எனவேதான் நடராஜ் விசயத்தில் அவசரப்பட்டு முதல்வர் ஜெயலலிதா முடிவு எடுத்து விட்டதாக கூறுகின்றனர்.
அதே நேரத்தில் உளவுத்துறையிடம் இருந்து கருத்து அறிக்க வாங்காமல் ஜெயலலிதா இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள். ஏனெனில் டிஜிபியாக நடராஜ் இருந்தபோது அவரால் பாதிக்கப்பட்டவர்கள்தான் இதனை போட்டு கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நீக்கிய டிவி சேனல்
இதனிடையே தன்னைப்பற்றிய தவறான புரிதலால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட டிவி சேனலை தொடர்பு கொண்டு கண்டனம் தெரிவித்துள்ளார் நட்ராஜ். இதனையடுத்து டிவி நிறுவனம், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளதோடு அந்த நிகழ்ச்சியில் இருந்த செம்பரம்பாக்கம் பற்றிய டெலிபோன் பேச்சு கருத்தையே நீக்கிவிட்டது.

காத்திருக்கும் நட்ராஜ்
அதே நேரத்தில் நடந்த சம்பவம் பற்றி விளக்கம் தர கட்சி தலைமையின் அனுமதி கேட்டு காத்திருக்கிறாராம் நட்ராஜ். அவரது விளக்கத்தை அதிமுக ஏற்றுக்கொண்டு மீண்டும் நட்ராஜூக்கு பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

முன்னாள் எம்.பி மலைச்சாமி கருத்து
முன்னாள் டிஜிபி நடராஜை நீக்குவதற்கு முன்பாக கொஞ்சம் தீர விசாரித்திருக்கலாம் என்கிறார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் அதிமுக எம்.பியுமான மலைச்சாமி. கடந்த ஆண்டு அதிமுக - பாஜக பற்றி டிவி சேனல் ஒன்றில் கருத்து கூறியதாலேயே இவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. இப்போது இவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications