ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை மரணம்: ஜெ. இரங்கல்... ரூ.1லட்சம் நிதி உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவண்ணாமலை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Jayalalithaa mourns death of boy who fell in borewell

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கிடாம்பாளையம் கிராமம், காந்தி நகர் பகுதியில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் 15.4.2014 அன்று தவறி விழுந்த கிடாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த துரை என்பவரின் ஒன்றறை வயது குழந்தை சுஜித் 16.4.2014 அன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை சுஜித்தின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+