ரஜினிக்கு ஒரு கடமை இருக்கிறது.. சொல்கிறார் ஜெத்மலானி
மதுரை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஒரு கடமை இருக்கிறது. அந்தக் கடமையை அவர் செய்ய வேண்டும் என்று பிரபல வழக்கறிஞரும், முன்னாள் பாஜக மூத்த தலைவருமான ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.
வைகோவை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காக வந்திருந்த ஜெத்மலானி முன்னதாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் பிரசித்தி பெற்றவர். என் நண்பர். அவருக்கு ஒரு கடமை இருக்கிறது.
மோடியை நமது நாட்டின் பிரதமராக்குவதற்கு ரஜினிகாந்தின் சக்தியை பயன்படுத்த வேண்டும். மோடி பிரதமராவதை அவர் ஆதரிக்க வேண்டும். மோடி மதச்சார்பானவர் என கூறுவது தவறு என்றார் ஜெத்மலானி.
ஏற்கனவே ரஜினியை தனக்கு ஆதரவாக திருப்ப பாஜக கடுமையாக முயன்றது. ஆனால் ரஜினி தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. மோடியை ரஜினி சந்திப்பார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் ரஜினி ஒதுங்கியே இருக்கிறார். இந்த நிலையில் ஜெத்மலானியும் ரஜினி வாய்ஸைக் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications