For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலை பார்த்த நகைக்கடைக்கு “அல்வா” – 40 பவுன் நகையுடன் ஊழியர் “எஸ்கேப்”!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நகைக்கடை ஒன்றில் வேலைபார்த்த ஊழியரே நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூர் வடக்கு மாடவீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் பிரகாஷ் என்பவர் நகைகள் செய்து கொடுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

முகப்பேரைச் சேர்ந்த இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கடையில் பழைய நகைகளை புதுப்பித்து கொடுக்கும் பணியில் இருந்து வந்தார்.

நம்பிக்கை வைத்த நிறுவனம்:

நீண்டநாள் ஊழியர் என்பதால் அவர் மீது நிறுவனம் நம்பிக்கை வைத்து இருந்தது.

40 பவுன் நகையுடன் மாயம்:

அவரிடம் சமீபத்தில் ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள 40 பவுனுக்கும் மேற்பட்ட பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றிக் கொடுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. அந்த நகையுடன் நேற்று அவர் மாயமாகி விட்டார்.

செல்போன் சுவிட்ச் ஆப்:

அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது.

நகைக்கடையினர் அதிர்ச்சி:

இதனால் நகைகடை நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் முகப்பேரில் வசிப்பது மட்டும்தான் தெரியும். முழு முகவரி எதுவும இல்லை. செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

போலீசில் புகார்:

இதுபற்றி நகைக்கடை நிர்வாகிகள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

English summary
Man steal the jewelry shop which he was worked a while. He was theft 60 lakhs worth jewel from the shop. Police filed case and searching him to arrest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X