சிமெண்ட் ஆலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு அரசுப்பணி : அமைச்சர் சம்பத்
சிமெண்ட் ஆலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் சம்பத் உறுதியளித்துள்ளார்.
அரியலூர் : அரியலூர் மற்றும் ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் ஆலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு ஆய்வின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என்றும் தொழிற்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்து உள்ளார்.
அரியலூரில் உள்ள தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலையின் பராமரிப்பு,மற்றும் புனரமைப்பு பணிகள் ரூ750 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது . இந்தப் பணியை தொழிற்துறை அமைச்சர் சம்பத் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னா் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலையின் விரிவாக்கப்பணி 100 சதவிகிதம் முடிவடையும் தருவாயில் உள்ளது.
வருகின்ற ஏப்ரல் மாதம் சோதனை முறையில் ஆலை இயக்கப்படும். ஆகஸ்ட் மாதம் முதல் முழுமையான உற்பத்தியை எட்டிவிடும். ஆலங்குளம் மற்றும் அரியலூர் சிமெண்ட் ஆலைகளின் மூலம் ஆண்டுக்கு 17 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி கிடைக்கும்.
அரியலூரில் மட்டும் 15 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படும். சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஆய்வின் அடிப்படையில் அங்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். அரசு சிமெண்ட் ஏஜென்சி மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி கூறியதால் தான் அதிமுகவில் இணைந்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் செல்ல மறுத்துவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications