சிமெண்ட் ஆலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு அரசுப்பணி : அமைச்சர் சம்பத்
சிமெண்ட் ஆலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் சம்பத் உறுதியளித்துள்ளார்.
அரியலூர் : அரியலூர் மற்றும் ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் ஆலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு ஆய்வின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என்றும் தொழிற்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்து உள்ளார்.
அரியலூரில் உள்ள தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலையின் பராமரிப்பு,மற்றும் புனரமைப்பு பணிகள் ரூ750 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது . இந்தப் பணியை தொழிற்துறை அமைச்சர் சம்பத் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னா் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலையின் விரிவாக்கப்பணி 100 சதவிகிதம் முடிவடையும் தருவாயில் உள்ளது.
வருகின்ற ஏப்ரல் மாதம் சோதனை முறையில் ஆலை இயக்கப்படும். ஆகஸ்ட் மாதம் முதல் முழுமையான உற்பத்தியை எட்டிவிடும். ஆலங்குளம் மற்றும் அரியலூர் சிமெண்ட் ஆலைகளின் மூலம் ஆண்டுக்கு 17 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி கிடைக்கும்.
அரியலூரில் மட்டும் 15 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படும். சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஆய்வின் அடிப்படையில் அங்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். அரசு சிமெண்ட் ஏஜென்சி மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி கூறியதால் தான் அதிமுகவில் இணைந்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் செல்ல மறுத்துவிட்டார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications