நடராஜனுக்கு ஹை பிபி இல்லை.. உளவு பார்க்கவே அப்பல்லோவில் அனுமதி.. கே.பி. முனுசாமி பகீர்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலமில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவின் தலைமையை எதிர்த்து குரல் கொடுத்து வரும் கே.பி. முனுசாமி, சசிகலாவின் கணவர் நடராஜனின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுகவின் தலைமை பொறுப்பிற்கு வந்துள்ள சசிகலாவையும் அவரது கணவர் நடராஜனையும் ஒரு பிடி பிடித்து வருபவர் கே.பி. முனுசாமி. இன்று கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிபட்டினத்தில் செய்தியாளர்களிடம் கே.பி. முனுசாமி கூறுபோது, தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள சசிகலாவையும் அவரது கணவரையும் கடுமையாக விமர்சித்தார்.

K.P. Munusamy questions Natarajan’s admission in Apollo

அப்போது, சசிகலா சட்டசபைக் குழு தலைவராக பொறுப்பேற்ற அன்றே அவரது கணவர் நடராஜன் சென்னை அப்பல்லோ மருத்துமனையில் ஏன் சேர்க்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் உளவு பார்ப்பதற்காகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறிய கே.பி. முனுசாமி, அவர் எதற்காக மருத்துவமனையில் சேர்ந்தார் என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த மருத்துவமனையில்தான் 72 நாட்கள் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+