சாமானியர்கள் வென்ற ஜல்லிக்கட்டு புரட்சி.. தமிழக மக்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு!
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதை நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.
கடந்த ஆண்டு தமிழக மக்களிடையே, அதுவும் குறிப்பாக இளைஞர்களிடையே, தன்னெழுச்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் காரணமாக, ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு, மத்திய, மாநில அரசுகளின் துணையோடு ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கியது.

இவ்வாண்டு தமிழகம் முழுக்க எந்தவித தொல்லையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு அமோகமாக நடைபெற்றது.
இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர்!
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2018
இந்த நிலையில் கமல்ஹாசன் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர்!
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
சில நெட்டிசன்கள், ஜல்லிக்கட்டு போராட்ட நிகழ்வை இந்த டிவிட்டின் ஊடே பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தமிழன் என்ற கர்வம் வந்த நாள் இன்று🐂💪 pic.twitter.com/MjqCzxKtKI
— ႽᎻᎪᎡᏢᏢ🏹 ツ (@iam_Sharpp_) January 23, 2018
ஜாதி, மத பாகுபாடின்றி தமிழர்கள் ஓரணியில் திரண்டு ஜல்லிக்கட்டுக்காக போராடிய நிகழ்வை ஒரு நெட்டிசன் ஷேர் செய்துள்ளார்.
அதேநேரம், பேருந்து கட்டண உயர்வு குறித்து ஏன் கமல் பேசவில்லை என சில நெட்டிசன்கள் கேட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.
பேருந்து கட்டண உயர்வு போராட்டத்திற்கு ஒரு விதை தூவுறது 😕 pic.twitter.com/PGPCffMvge
— Troll bakths (@trollvishal) January 23, 2018












Click it and Unblock the Notifications