அரசியலில் நானும் ரஜினியும் எதிரும், புதிரும்தான்... ஆனால் ஒன்று மட்டும் உறுதி - கமல்
அரசியலில் எதிரும் புதிருமாக நின்றாலும் மரியாதை குறைய கூடாது என்பதில் நானும் ரஜினிகாந்தும் முடிவு எடுத்துள்ளோம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: அரசியலில் எதிரும் புதிருமாக நின்றாலும் மரியாதை குறைய கூடாது என்பதில் நானும் ரஜினிகாந்தும் முடிவு எடுத்துள்ளோம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும் மற்ற தலைவர்களை சந்திக்கும் முன்பே தான் ரஜினியை ரகசியமாக சந்தித்தேன் என்றும் கமல் தெரிவித்தார்.
கமல்ஹாசன் நேற்றைய தினம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இதற்காக மதுரையில் பொதுக் கூட்டத்தை நடத்தி அதில் அறிவித்தார்.
அதற்கு முன்னதாக சென்னையில் தனக்கு பிடித்தமான தலைவர்களை கமல் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

போயஸ் தோட்டத்தில்
ரஜினியை கடந்த இரு தினங்களுக்கு முன் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் கமல் சந்தித்தார். அப்போது மதுரை பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாகவும் பொதுக் கூட்டத்துக்கு செல்லும் முன் தனக்கு பிடித்தமானவர்களை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது விளக்கம்
கட்சியை கமல் தொடங்கிய நிலையில் ரஜினியுடனான சந்திப்பு குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அதில் அனைவரையும் சந்திக்கும் முன்பே நடிகர் ரஜினியை ரகசியமாக சந்தித்தேன்.

வாழ்த்து
"யாராவது வரமாட்டார்களா என்ற ஏக்கம் மக்களிடம் உள்ளது என என்னை வாழ்த்தி அனுப்பினார் ரஜினி". அரசியலில் எதிரும் புதிருமாக நின்றாலும் மரியாதை குறைய கூடாது என ரஜினியும் நானும் முடிவெடுத்துள்ளோம்.

ரஜினியிடம் கூறினேன்
பிக்பாஸ் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே கட்சி ஆரம்பிக்கும் முடிவை ரஜினியிடம் கூறிவிட்டேன். காலா படப்பிடிப்பின்போதும் அவரை ரகசியமாக சந்தித்து எனது முடிவை தெரிவித்தேன் என்றார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications