Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகூர் கந்தூரி விழா.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி ஏந்திய காங், விசிக. கம்யூ கட்சியினர்

Subscribe to Oneindia Tamil

நாகூர்: நாகூர் கந்தூரி விழாவிற்கு வருகை தரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி ஏந்தி கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவில் இன்று இரவு சந்தினக் கூடு ஊர்வலமும் நாளை காலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.

Kanthuri Function: Strong condemn against TN Governor R N Ravi who attends

இந்த கந்தூர் விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. 16 ஆம் தேதி சந்தனக் கட்டைகளை அரைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று முன் தினம் இரவு வாண வேடிக்கை உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்த நிலையில் இன்று காலை சந்தனம் பிழிதல், இரவு தஞ்சை அரண்மனை போர்வை மற்றும் தங்கப் போர்வை போர்த்துதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் இன்று இரவு நாகப்பட்டினத்திலிருந்து புறப்படுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ளும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவை முடித்துக் கொண்டு அங்கிருந்து கார் மூலம் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை திரும்புவார். இந்த நிலையில் ஆளுநர் கந்தூரி விழாவிற்கு வருகை தருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தினர். இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தி 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+