தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே எட்டிப் பார்க்காத நிலையில் குமரியில் அன்புமணி : நெகிழும் மக்கள்
புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை அன்புமணி ராமதாஸ் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதித்த பகுதிகளையும், மீனவ மக்களையும் பா.ம.க இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் இன்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஓகி புயலால் தென் மாவட்டங்கள் பலத்த மழை பெய்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் மிகுந்த சேதம் அடைந்துள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன.
மாவட்டம் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. மேலும், மக்களின் வீடுகள், சாலைகள், விளை நிலங்கள் என அனைத்தும் மிகுந்த சேதமடைந்து உள்ளன. மீனவ கிராமங்களில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்களைக் காணவில்லை. இதனால், மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளன.

கடும் கோபத்தில் மக்கள்
இதுவரை புயலால் பாதிப்படைந்த எந்த ஒரு பகுதியையும் அந்த மாவட்டத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ வந்து சந்திக்கவில்லை. மாவட்டம் முழுவதும் பலத்த சேதமடைந்து உள்ள நிலையில், வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் தங்களின் குறைகளை மக்கள் பிரதிநிதிகள் யாரும் கேட்க வராததால், மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் மட்டுமே மீட்புப் பணிகளைச் செய்து வருகிறது.

முதல்வருக்கு அன்புமணி கேள்வி
இந்நிலையில், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கன்னியாகுமரி மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று ஆய்வு செய்தார். மீனவ கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அன்புமணி. இதுவரை காணாமல் போன மீனவர்களை மீட்க அரசு என்ன செய்துள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், மீட்புப் பணிகளில் கவனம் செலுத்தாமல் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது குறித்தும் கண்டனம் தெரிவித்தார் அன்புமணி.

பாதிக்கப்பட்ட விவசாயிகள்
அதன் பின், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழைத் தோட்டங்கள், ரப்பர் மரத்தோட்டங்களை ஆய்வு செய்தார் அன்புமணி. மழையால் ஒரு லட்சம் ஹெக்டேர் அளவிலான பயிர்கள் நாசமடைந்திருப்பதாகவும் , இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து அவர்கள் மீண்டு வர தகுந்த நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இதுவரை பாதிப்பு குறித்த எந்த ஒரு சேத மதிப்பீடும் நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்ட அன்புமணி அதையும் விரைந்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மாநில அரசு மீது குற்றச்சாட்டு
கன்னியாகுமரி மீட்புப்பணிகளுக்காக 25 கோடியை மட்டுமே ஒதுக்கி உள்ளது எடப்பாடி தலைமையிலான மாநில அரசு. இந்தத் தொகை எதற்குமே போதுமானது அல்ல. எம்.ஜி.ஆர் விழாவிற்கு 500 கோடி செலவு செய்யும் அரசின் இந்தப் போக்கு சரியானது அல்ல. புயல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகள் செய்யாமல் விட்டதே இத்தனை இழப்பிற்கும் காரணம் என்று அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். கேரளாவில் மீட்புப்பணிகளில் அந்த மாநில முதல்வர் மற்றும் நிர்வாகம் செயல்படுவதைப் பார்த்தாவது தமிழக ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மக்களுக்காக மருத்துவ முகாம்
சாமித்தோப்பு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக சார்பாக, நிவாரணப் பொருட்கள் வழங்கி அப்பகுதி மக்களுக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் அன்புமணி. மேலும், பல இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். தமிழக அரசை நம்பி இருக்காமல் நிவாரண உதவிகளையும், மீட்புப் பணிகளையும் பா.ம.க தொண்டர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தங்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுப் பிரதிநிதிகளே இதுவரை தங்களைச் சந்திக்காத நிலையில், அன்புமணி ராமதாஸ் தங்களை வந்து சந்தித்து இருப்பதால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நெகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications