கல்லிலே கலை வண்ணம் கண்ட தஞ்சையில்.. காரைக்குடி மாணவர்கள்!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தஞ்சாவூருக்கு களப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர்.
முதலில் மாணவர்கள் இராஜ இராஜனின் மணிமண்டபத்தைப் பார்வையிட்டனர். பின்னர் தஞ்சாவூர் பெரிய கோவிலின் பிரமாண்டத்தை கண்டு அதிசயித்தனர்.
அங்கு அவர்களுக்கு அக்கோயிலின் நந்தியின் சிறப்பு, கோவில் கலசத்தின் சிறப்பு, கட்டிட அமைப்பு, இராஜ இராஜ சோழனின் சிறப்புகள் குறித்து கூறப்பட்டது.

கல்வெட்டுக்கள்
கோவில் சுவர்களில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள், செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், வரையப்பட்டுள்ள ஓவியங்களை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

சிவகங்கை பூங்கா
பின்னர் சிவகங்கை பூங்காவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மாணவர்கள் ஊஞ்சல், சறுக்குமரம், படகு சவாரி என ஒன்று கூடி விளையாடி மகிழ்ந்தனர்.

சரஸ்வதி மஹால் நூலகம்
சரபோஜி மன்னரின் அறிய பொக்கிஷமான சரஸ்வதி மஹால் நூலகம் அழைத்து செல்லப்பட்டார்கள். அங்கு மாணவர்கள் பல்வேறு வகையான காட்சிப் பொருட்களைப் பார்வையிட்டன்.

பனை ஓலை நூல்கள்
பனை ஓலையால் எழுதப்பட்ட நூல்கள், பல மொழிகளால் எழுதப்பட்ட நூல்கள், எழுத்தாணி, நூலக வாயிலில் வரையப்பட்ட ஓவியங்கள், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கற் சிற்பங்கள், கற் குண்டு, கற்களினால் உருவாக்கப்பட்ட ஜன்னல், சரபோஜி மன்னரின் சிலை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, திமிங்கலத்தின் எலும்பு ஆகியவற்றை பார்வையிட்டனர்.

தஞ்சாவூர் தல வரலாறு
அங்கு தஞ்சாவூர் தல வரலாறு குறித்த ஒலி, ஒளி காட்சி காண்பிக்கப்பட்டது. அது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இக் களப் பயணத்திற்க்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் பீட்டர் ராஜா செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications