அழகிரி என்று எனக்கு ஒரு பிள்ளையே இல்லை.. கருணாநிதி ஆவேசம்
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது எனத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
மேலும் மு.க.அழகிரியை தான் மறந்து வெகு நாட்களாகி விட்டது என்றும், அப்படி ஒரு மகனே தனக்கு இல்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று திமுக பொருளாளரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் கட்சியில் தனக்குள்ள அனைத்துப் பொறுப்புகளையும் ராஜினாமா செய்ததாக மதியம் தகவல் வெளியானது. ஆனால், இது தொடர்பாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இதனால் ஸ்டாலின் வீட்டு வாசலில் செய்தியாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தை மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். மேலும், ஸ்டாலின் ராஜினாமாவை கருணாநிதி ஏற்கக் கூடாது என அவர்கள் கோஷமிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கட்சித் தலைமை ஏற்றுக் கொள்ளாததால் ஸ்டாலினின் ராஜினாமா வாபஸ் பெறப்பட்டதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் தேரிவித்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, ‘ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது. ராஜினாமா செய்ய முன்வந்த ஸ்டாலின் எனது அறிவுரையை ஏற்று முடிவை மாற்றிக் கொண்டார். தேர்தல் தோல்வி குறித்து கட்சியின் உயர் மட்ட செயல் திட்டக் குழு கூடி விவாதிக்கும். சமீபத்திய தேர்தல் தோல்விக்கு ஊடகங்களே காரணம் என விளக்கமளித்துள்ளார்.
மு.க.அழகிரி ஸ்டாலின் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்துள்ளது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, அவரை நான் மறந்து வெகு நாட்களாகி விட்டது. அவரைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. அப்படி ஒரு பிள்ளையே எனக்கு இல்லை. அழகிரி திமுகவில் இருந்த போதும் 2,3 முறை திமுக தோல்வியடைந்துள்ளது என்றார் கருணாநிதி.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications