தமிழக ஆம் ஆத்மி வேட்பாளர்கள்: கெஜ்ரிவால் தெரிந்து செய்தாரா, தெரியாமல் செய்தாரா?
சென்னை: ஆம் ஆத்மி கட்சி சார்பில் கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப. உதயகுமார், புஷ்பராயன் மற்றும் ஜேசுராஜ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி. அதில் நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப. உதயகுமார், புஷ்பராயன் மற்றும் ஜேசுராஜ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கூடங்குளம்
தங்கள் கட்சி அவ்வளவாக பிரபலம் இல்லாத நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 தொகுதிகளிலும் கூடங்குளம் போராட்டக்காரர்களை களமிறக்கி வாக்கு வங்கியை குறி வைத்துள்ளது ஆம் ஆத்மி.

மத்திய சென்னை
ஊழல்வாதிகளுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் திமுக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் போட்டியிடும் மத்திய சென்னையில் ஜே. பிரபாகர் என்பவரை நிறுத்தியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

ஆ. ராசா
நாட்டையே அதிர வைத்த 2ஜி ஊழலில் சிக்கிய முன்னாள் திமுக மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி யாரையும் நிறுத்தாதது ஆச்சரியம் தான்.

வேலூர், நாகை
தமிழகத்தில் வேலூர் மற்றும் நாகை ஆகிய தொகுதிகளில் தான் ஆம் ஆத்மி கட்சி பிரபலமாக உள்ளது. ஆனால் அந்த தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி யாரையும் களத்தில் இறக்கவில்லை.












Click it and Unblock the Notifications