மதுவுக்கு எதிராக போராடி வரும் மதுரை சட்ட மாணவி நந்தினிக்கு வீட்டுக் காவல்!
மதுரை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நீக்கி பூரண மதுவிலக்கினை அமல்படுத்தக் கோரி இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகின்ற நிலையில் மதுவிலக்கிற்காக போராடி வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மதுரையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மதுரை சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவி நந்தினி. தனது தந்தை ஆனந்துடன் சேர்ந்து மதுக்கடைகளை மூடக் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்.

இந்நிலையில் காந்தியவாதி சசிபெருமாளின் இறப்பினைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுவிற்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பூரண மதுவிலக்கு கோரி குடிகாரர்களின் கால்களில் விழுந்து குடியை விடக் கோரி போராட்டம் நடத்தியவர் சசி பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மாணவி நந்தினியைப் போராட்டத்தில் கலந்து கொள்ள விடாமல் தடுப்பதற்காக அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளது மதுரை காவல்துறை. நந்தினியுடன் கூடவே அவரது தந்தை ஆனந்தனும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இருவரும் பந்த் முடியும் வரை வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று காவல்துறையினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications