நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.. போராட வேண்டாம், கொண்டாடுவோம்: லாரன்ஸ்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது என்பதால், நாம் வெற்றியை கொண்டாடுவோம் என்றும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மெரினா போராட்ட களத்தில் உடல் நல குறைவையும் பொருட்படுத்தாதது பங்கேற்றதோடு, சொந்த செலவில் உணவு, குடிநீர் சப்ளை செய்தவர் லாரன்ஸ்.

இந்நிலையில், மெரினாவில் இன்று போலீசார் தடியடி நடத்தியுள்ள சூழலில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் லாரன்ஸ் கூறியதாவது:
Let us all be silent and celebrate pic.twitter.com/FFLkvNGESb
— Raghava Lawrence (@offl_Lawrence) January 23, 2017
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது. ஆளுநரும் இதை தனது உரையில் உறுதி செய்துவிட்டார். ஆனால் நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்பது யாருக்குமே புரியவில்லை. நமக்கு நிரந்தர வெற்றி கிடைத்த இந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் போராட வேண்டாம்.
எந்த இடத்தில் 7 நாட்களாக கஷ்டப்பட்டோமோ அதே மெரினாவில் இன்று இரவு நாம் வெற்றியை கொண்டாடுவோம். நானே நேரில் வந்து விளக்கம் அளிக்கிறேன். இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications