சென்னையில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த பெண் வக்கீல் வெட்டிக் கொலை
சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை செய்யப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்து வந்த பெண் வக்கீல் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் லட்சுமி சுதா (58). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் லட்சுமி சுதா கொலை செய்யப்பட்டுள்ளார். நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து லட்சுமி சுதா உடலை கைப்பற்றிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள வித்யோதயா மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்த சாந்தி (65) என்ற மூதாட்டி கடந்த திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டார். சொத்துக்காக சாந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் துப்பு துலங்காத நிலையில், லட்சுமி சுதா என்ற பெண் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் தனியாக வீட்டில் வசிக்கும் பெண்களைக் குறி வைத்துக் கொலை செய்வது ஒரு தொடர் கதையாக தொடர்ந்து வருகிறது. தி.நகரில் மட்டும் பல பெண்கள் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சாந்தி என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்ட சில தினங்களில் மற்றொரு கொலை மேற்கு மாம்பலம் பகுதியில் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்












Click it and Unblock the Notifications