தமிழர்களின் விவசாயத்தை அழித்து தஞ்சையை பாலைவனமாக்க விடமாட்டோம் - வைரமுத்து கொதிப்பு
தமிழர்களுக்கு நதி உரிமை மறுக்கப்படுகிறது. தமிழர்களின் ஆதி பண்பாடு விவசாயம். அது அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு தெரிகிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான் நீர் வந்து சேரும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். விவசாயத்தை அழித்து தஞ்சையை பாலைவனமாக்க விடமாட்டோம் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று சேப்பாக்கம் எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. போராட்டக்காரர்களின் ஐபிஎல் போட்டி ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தமிழர் பண்பாட்டு கலை இலக்கிய பண்பாடு சார்பாக அண்ணாசாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

சேப்பாக்கம் மைதானம் செல்லும் அனைத்து சாலைகளிலும் போராட்டம் நடைபெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒத்தி வைக்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாசாலை போர்க்களமானது. போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது சிலர் கற்களை வீசவே தடியடி நடத்தப்பட்டது.
இதனையடுத்து போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய வைரமுத்து, நீருக்காக நீதி கேட்டு வீதியில் திரண்டுள்ளோம் என்றார். தமிழன் என்ற உணர்வுடனேயே அண்ணாசாலையில் திரண்டுள்ளோம். தமிழர்களுக்கு நதி உரிமை மறுக்கப்படுகிறது. தமிழர்களின் ஆதி பண்பாடு விவசாயம். அது அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு தெரிகிறது. நாம் நதிக்காக போராடுகிறோம். மண்ணுக்காக போராடுகிறோம்.
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அவகாசம் நீளமானது. அது தேவையில்லை. ஸ்கீம் என்றாலும் காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் பொருள் ஒன்றுதான் செயல் ஒன்றுதான். செயல்களின் மீதுதான் அக்கறை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான் நீர் வந்து சேரும். எங்களுக்கு உரிமையான நீர் வந்து சேர வேண்டும்
தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் அழிக்கப்பட்டு எண்ணெய் படுகையாக்க மாற்ற யாராவது முயற்சி செய்தால் அதை விட மாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராடுவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் மட்டுமே எங்களுக்கான உரிமை கிடைக்கும் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications