புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யுங்கள்.. திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் உதவிகள் செய்ய கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திமுக தொண்டர்களுக்கு அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளார்.

ஸ்டாலின் இதுகுறித்து கூறியுள்ளதாவது: வர்தா புயல் மற்றும் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், பாதுகாப்பு காரணங்களுக்காக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுநல அமைப்புகளுடனும் இணைந்து அந்தந்த பகுதிகளில் உள்ள கழக உடன்பிறப்புகள் தேவைப்படும் உதவிகளை செய்யுமாறும், பாதுகாப்பு பணிகளில் உதவுமாறும் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
வர்தா புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியுள்ள சூழ்நிலையில் மின்சாரம், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகள் விரைவில் கிடைத்து இயல்பு நிலை திரும்ப அதிமுக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications