சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தனி 'லைன்' இழுக்கிறது மின்வாரியம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் டான்ஜெட்கோவின் தலைமைப் பொறியாளர் டி.வி.கே.முருகன் இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில் இதைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வழக்கறிஞர் சித்திரவேலு என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டிருந்தார். அதில், நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நான் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகியிருந்தபோது அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் கோர்ட் செயல்படுவதே பெரும் கேள்விக்குறியானது.
நீதிமன்றங்கள் செயல்படுவதற்கு தடையற்ற மின்விநியோகம் முக்கியமானது, அவசியமானது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் தடையற்ற மின்சாரம் கிடைக்க வகை செய்யும் வகையில், இன்வர்ட்டர்கள் அல்லது ஜெனரேட்டர்கள் பொருத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதுதொடர்பாக டான்ஜெட்கோவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது டான்ஜெட்கோவின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், டான்ஜெட்கோ சார்பி்ல சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தனி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தனி மின் தடமே ஏற்படுத்தப்படும். இதன் மூலம் அங்கு மின் இணைப்பு ஏற்படாது. இதேபோன்ற வசதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும் ஏற்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications