அவதூறு வழக்கில் நிபந்தனையை தளர்த்த கோரிய பிரேமலதாவுக்கு ரூ.5000 அபராதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவதூறு வழக்கில் நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய தே.மு.தி.க. மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்திற்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 Madras High Court imposes Rs 5,000 on premalatha

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு பிரேமலதா மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி 15 நாட்களுக்குள் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், இரண்டு வாரத்துக்கு பிரேமலதா தினமும் 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பில் உள்ள நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று பிரேமலதா மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழங்கப்பட்ட முன் ஜாமீனை பெறாமல் நிபந்தனைகளை தளர்த்தக் கோருவதை ஏற்க முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீனை பெற்றுக் கொண்டு வழக்கு செலவாக 5000 ரூபாயையும் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+