மதுரை: பராமரிப்பு பணி காரணமாக... 3 மாதங்களுக்கு சனி, ஞாயிறுகளில் பயணிகள் ரயில் ரத்து
மதுரை:பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி, 3 மாதங்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
ரயில்பாதை பராமரிப்பு மற்றும் பாலம் பணிகள் நடைபெற்று வருவதால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணிகள் ரயில் ரத்து மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 27ம்தேதி முதல் 2015 மார்ச் 26ம்தேதி வரை பயணிகள் ரயில் இயங்காது.

இந்த அறிவிப்பின் படி சனிக்கிழமை இயங்கும் திருச்சி-காரைக்குடி பயணிகள் (76831) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் திண்டுக்கல்-பழனி (56774), பழனி-திண்டுக்கல் (56773), திருச்சி-மானாமதுரை (76807), மானாமதுரை-திருச்சி(76806), செங்கோட்டை- திருநெல்வேலி (56798), திருநெல்வேலி-செங்கோட்டை (56799), தூத்துக்குடி-திருநெல்வேலி (56827), திருநெல்வேலி- தூத்துக்குடி (56828), காரைக்குடி- திருச்சி( 76830), திருநெல்வேலி-செங்கோட்டை (56803), செங்கோட்டை-திருநெல்வேலி( 56802) ஆகிய பயணிகள் ரயில் 3மாதங்களுக்கு இயங்காது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.தற்போது சபரிமலை சீசன்,கிறிஸ்துமஸ் விடுமுறை,பொங்கல் பண்டிகை என வரிசையாய் விடுமுறைகள் வரும் நிலையில் தென்னக ரயில்வே பயணிகள் ரயில்சேவையை தொடர்ந்து பராமரிப்பு பணியை மேற்க் கோள் காட்டி நிறுத்துவதால் எராளமான பயணிகள் தவிப்புக்குள்ளகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications